ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம், மீன் குழம்பும் மண் பானையும். சிவாஜி குடும்ப தயாரிப்பில் விரைவில் வெளிவர உள்ள இந்த படம் பற்றியும், தன்னை பற்றியும் காளிதாஸ் பேசுகிறார்.
மலையாள படங்களில் அறிமுகமாகாமல், தமிழில் அறிமுகமாவது ஏன்?
இரண்டு மாத குழந்தையாக இருக்கும்போதே, சென்னை வந்து விட்டேன். படித்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். லயோலா காலேஜில் விஸ்காம் படித்தேன். சின்ன வயதில், என் உடல் எடை அதிகமாக இருந்தது. கல்லுாரியில் படிக்கும்போது, எடையை குறைத்தேன். ஒரு விழாவில் என்னை பார்த்த, இயக்குனர் தரணி தரன், ஒரு கதை கூறினார். கதை பிடித்ததால், நடிக்க சம்மதித்தேன். அதேபோல், இயக்குனர் அமுதேஷ் கூறிய கதையிலும் நடிக்க சம்மதித்தேன். இதில் முதலில் வெளியாக உள்ளது, மீன் குழம்பும், மண் பானையும் படம் தான்.
மீன் குழம்பும் மண் பானையும் படம் பற்றி சொல்லுங்க?
அப்பா - மகனுக்கு இடையே நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான், படத்தின் கதை. காரைக்குடியில் இருந்து மலேஷியா சென்று ஓட்டல் நடத்தும் என் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார். ஜாலியான கல்லுாரி மாணவனாக நான் நடிக்கிறேன். இந்த படத்தில் கமல் சார் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
மலையாளத்திலும் நடிக்கிறீங்க போல...
சின்ன வயதில், சில மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு தேசிய விருதும் கிடைத்தது. ரொம்ப இடைவெளிக்கு பின், இப்போது மலையாளத்தில், பூமரம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.
உங்களுக்கு நட்பு வட்டாரம் எப்படி?
என்னோடு படித்தவர்கள் மட்டும் தான், நட்பு வட்டாரத்தில் உள்ளனர். பார்த்தவுடன் பழகும் ஆள் நான் இல்லை. கொஞ்சம் பழகிய பின் தான், யாரிடமும் நட்பு பாராட்டுவேன்.
உங்களுக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின் யார்?
சிம்ரன் மேடம் ரொம்ப பிடிக்கும். அவங்க நடனம், நடிப்பு எல்லாமே பிரமாதமாக இருக்கும். அவங்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசையாக உள்ளது. எனக்கு ஹீரோயின் கிடைப்பது தான் பெரிய பிரச்னையாக உள்ளது. யாருடன் நடித்தாலும், அக்கா - தம்பி மாதிரி இருக்கிறது. மீன் குழம்பு படத்தில் கூட, தேடிப் பிடித்துத் தான், ஆஸ்னாவை நடிக்க வைத்தோம்.
எந்த மாதிரி படங்கள் நடிக்க ஆசை?
சின்ன வயசில இருந்தே நடிப்பில் ஆசை உண்டு. கொஞ்சம் படித்து விட்டு, அதன்பின் நடிக்க வரலாம் என நினைத்தேன். அமைதியான படங்கள் தான் எனக்கு செட் ஆகும். எடுத்த உடனேயே அடிதடியுடன் துவக்கினால், மக்கள் ஏற்க மாட்டார்கள். சீரியசான படங்களில் எல்லாம், இப்போது நடிக்க முடியாது.
உங்க ரோல் மாடல்?
கமல் சார்; சினிமாவுக்காகவே வாழ்கிறவர் அவர். இந்த படத்தில் அவரோடு நடித்தது, எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.
நடிப்பில், அப்பாவின், அட்வைஸ் என்ன?
அப்படி எல்லாம் பெரிதாக எதுவுமில்லை. செய்வதை ரசித்து செய் என்று மட்டுமே கூறினார். நடிப்பில் எப்போது வெறுமையாக தெரிகிறதோ; அப்போது நடிப்பதை விட்டு விடு என்றார்.
அப்பாக்கு சரியான ஜோடி ஊர்வசியா; குஷ்புவா?
சில படங்களில் ஊர்வசி, அப்பாவுக்கு சரியான போட்டியாக இருப்பாங்க. சில படங்களில் குஷ்பு சரியான ஜோடியாக தெரிவாங்க. இரண்டு பேருமே, அப்பாவுக்கு ஏற்ற ஜோடிதான்.
சென்னையில் எப்படி பொழுது போகிறது?
சினிமா பார்ப்பது தான் என் பொழுது போக்கு. பெரிய படம், சிறிய படம் என்ற பாரபட்சம் இல்லாமல், எல்லா படங்களையும் பார்த்து விடுவேன்.
இப்போதுள்ள இளம் நடிகர்களில் உங்களை கவர்ந்தவர்?
தனுஷ் நடிப்பு இயல்பாக இருக்கிறது; இதை, அவரிடம் நேரிலேயே சொல்லி இருக்கிறேன். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்கள், கதை தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
சென்னையில், பெண் தோழிகள் இருக்காங்களா?