சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வட நாட்டு சேனலான கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பான பரபரப்பு தொடர் நாகினி. மந்திர தந்திரங்கள் நிறைந்த சமூக கதை. நல்ல பாம்பு பெண்ணுக்கும், கெட்ட பாம்பு பெண்ணுக்கும் நடக்கிற மோதல் கதை. கதையை விட அதில் நடித்திருக்கும் அழகான பெண்களுக்காக ஆண்களையும் பார்க்க வைத்த சீரியல். குறிப்பாக ஹீரோயின் மவுனி ராயின் காந்த கண்கள் பிரபலம்.
அர்ஜுன், பிஜ்லானி, அதா கான், சுதா சந்திரன் நடித்துள்ள இந்த தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கி கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இந்த தொடர் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் நாகினி தொடருக்கு இந்தியில் கிடைத்த வரவேற்பினால் அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி உள்ளது. வருகிற 8ந் தேதி முதல் கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதிலும் மவுனிராயின் கவர்ச்சியும், கலாட்டாவும் கலக்க இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாகினி முதல் பாகம் முடிந்ததும். அப்படியே இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்புகிறார்கள். ரசிகர்களை சினிமாவில் பேய் பிடித்து ஆட்டுகிறதென்றால் சின்னத் திரையில் பாம்பு பிடித்து ஆட்டுகிறது.