சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபுதேவா ஸ்டுடியோஸ், திங்க் பிக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சில சமயங்களில். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண்,எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். எய்ட்ஸ் நோய் சம்பந்தப்படட கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பிரகாஷ்ராஜ் பேசுகையில், இந்த படத்தில் நடிப்பை பற்றி பேச வேண்டாம். இது முழுக்க முழுக்க பிரியதர்ஷன் படம். நாங்கள் நடிகர்கள் என்ன பண்றோம். டைரக்டர்கள் சொல்றதை செய்றோம். இன்னைக்கு எனக்கு பெருமை என்னன்னா, உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு தமிழ் மண்ணுல உருவாகியிருக்கும் ஒரு படம் சில சமயங்களில். இப்படிப்பட்ட ஒரு படைப்பு நடக்கனும்னா காசால நடக்காது. திறமை, பேசன், ஒரு நம்பிக்கை வேண்டும். ஒரு லட்சியம் வேணும். இது எல்லாமே ப்ரியதர்ஷன் சாருக்கிட்ட இருக்கு. நான் பல மொழிகளிலும் 300க்கு மேல படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா ஒரு காஞ்சிபுரம், இருவர், சில சமயங்களில் மாதிரி நடிக்கவில்லை.
சினிமாவில் நடிக்கும்போது பெயர், புகழ், பணம் எல்லாம் வரும். ஆனால் ஒரு சிலர்களால்தான் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு பெருமையை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் அதுதான் சில சமயங்களில் படம். காஞ்சிபுரம் படம் பண்ணும் போது இப்படியொரு கதை இருக்கு. நீ நடிக்கிறேன்னு சொன்னா பண்றேன். இல்லேன்னா அந்த கதாபாத்திரத்திற்கான நடிகனை தேடிக்கிட்டே இருப்பேன் என்று சொல்லும்போது இந்த கதையை எப்படி இத்தனை வருசமாக வயிற்றுக் குள் வச்சிருந்தீங்கன்னு கேட்டு நடிச்சேன்.
பிரியதர்ஷன் டெக்னிக்கல், அனுபவம் மட்டுமே உள்ள இயக்குனர் அல்ல. நம்ம செய்ற ஒவ்வொரு துறையும் நம்ம யாருன்னு அடையாளம் காட்டத்தான். காஞ்சிபுரம், சில சமயங்களில் படங்களை பார்க்கும்போது உள்ளத்தின் உணர்வுகள் தெரியும். ஒவ்வொரு சீனை செதுக்கும்போதும் அவருக்குள் இருந்த பசி, ஆழமான ஞானம், ஒரு பேஷன் எங்களுக்குள்ள வந்துக்கிட்டேயிருக்கும். சிறந்த நடி கன், தேசிய விருது வாங்கினது. இந்தியாவிலேயே சிறந்த படமாக வந்தது. இதையெல்லாம் தாண்டி கடல் கடந்து உலக சினிமா விழாக்களுக்கு செல்லும் போது அங்கு வந்த எத்தனையோ படங்களுக்கு மேலாக இது கருதப்பட்டது. ஆனால் ஆஸ்கருக்கு போகும்போது நாம் நடிக்காத ஒரு படம் வரும்போது நான் அழுதிருக்கிறேன். ஏனென்றால் பிரியதர்ஷன் அங்கே போக வேண்டியவர். அந்த ஒரு தாகத்தை ஒரு பெயினை இந்த படம் தீர்த்திடுச்சி.
அதற்கு இத்தனை வருட தவம் தேவைப்படுது. கோல்டன் குளோப் என்ற இன்டர்நேசனல் பெஸ்டிபெல்லில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி ஒரு பிரியமியர் ஷோ நடக்குது. அதில் ஒரு பத்து படங்கள் போட்டியிடுகிறது. அதில் 5 தேர்ந்தெடுத்து அது வந்த பிறகு ஜனவரியில் கோல்டப் குளோப். அதுவரைக்கும் போயிட்டோம் என்றால் அதன்பிறகு ஆஸ்கருக்கு ஈஸியாக போயிடலாம். அதுக்கான தகுதி இது. நவம்பரில் செயின்ட்சூரியஸ் இன்டர் நேசனல் போட்டிக்கு அனுப்புகிறோம்.
இதை ஏன் சொல்றேன்னா. சினிமா எடுக்கிறது எளிது. சினிமா என்பது ஒரு மொழி. ஆனா உலகத்தில் அந்த ஒரு மேடையில அங்கிருந்து திரும்பிப்பார்க்கும்போது தமிழ் சினிமாவை பார்க்க வைக்கிற ஒரு படமாக இது அமைந்திருக்கு. தமிழ் சினிமாவோ, தமிழ் மக்களோ, தமிழ் திரையுலகமோ, எனக்கும், பிரியதர்ஷனுக்கும் இது பெருமைப்படுற ஒரு விசயம். இப்படிப்பட்ட ஒரு சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அதற்காகத்தான் இந்த சந்திப்பு என்றார்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.