ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பிங்க்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நான்கு நாளில் சுமார் 20 கோடி வசூல் செய்திருப்பதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமிதாப் பச்சன், வெளிநாடு சென்ற போது தான் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தாக கூறினார்.
இதுப்பற்றி அவர் கூறியதாவது... ‛‛நான் வெளிநாடு சென்றபோது அங்குள்ளவர்கள், இந்தியா என்றாலே பாலியல் சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடு என்று எண்ணினார்கள், இந்த ஒரு விஷயம் என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது. இன்றைக்கு நம்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கின்றன. இதைத்தான் மறைமுகமாக இந்த சமூகத்திற்கு ஒரு செய்தியாக பிங்க் படம் மூலம் சொல்லியிருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.