ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷாலும் வினியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு உரிய ஒரு ஹீரோவாக மாறியுள்ளார். அவர் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது ஆரம்பமாகி நடந்து வருகின்றன. இதனிடையே தன்னுடைய இரண்டாவது சொந்தத் தயாரிப்பாக புதிய படம் ஒன்றை பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார். இந்தப் படத்தின் நாயகியாக 'மெட்ராஸ், கதகளி, கணிதன்' படங்களில் நாயகியாக நடித்த கேத்தரின் தெரேசா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
கேத்தரின் தெரேசா ஏற்கெனவே விஷ்ணு விஷால் ஜோடியாக 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கி வந்த 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் கதையை சுசீந்திரன் எழுதியிருந்தார். கடந்த வருடம் ஆரம்பமான அந்தப் படப்பிடிப்பு கொஞ்ச நாட்கள் மட்டுமே நடந்தது. அதன் பின் அந்தப் படம் பற்றிய சத்தமே வெளிவராமல் இருந்தது. தற்போது அந்தப் படம் 'டிராப்' செய்யப்பட்டுவிட்டதாக விஷ்ணு விஷாலே தெரிவித்துள்ளார். அந்தப் படம் டிராப் ஆனதால்தான் மீண்டும் கேத்தரின் தெரேசா ஜோடியாக சேர்க்கப்பட்டரா அல்லது அந்தப் படத்திலிருந்த காட்சிகளை மீண்டும் தற்போது முருகானந்தம் இயக்கி வரும் படத்திலும் இணைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.