ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் பலர் நடிக்கும் காற்று வெளியிடை படம் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமாகி அங்கு ஒரு மாத காலம் வரை நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறும் என்று தகவல் வெளியானது. காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் மணிரத்னம் அவருடைய குழுவினரிடன் லொகேஷன் பார்த்து வருகிறார்.
விரைவில் அங்கு, காற்று வெளியிடை படத்திற்கான பாடல் காட்சிகள், சில சண்டைக் காட்சிகள் ஆகியவை படமாகும் எனத் தெரிகிறது. இந்தப் படம் ஒரு காதல் கதை என்பது மட்டும் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டதிலிருந்து ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கமான தன்னுடைய படங்களை வித்தியாசமான கதைக்களத்துடன் படமாக்கும் மணிரத்னம் காற்று வெளியிடை படத்தில் என்ன மாதிரியான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.
கார்த்தி நடித்து அடுத்து காஷ்மோரா படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. அதற்கடுத்த படமாக காற்று வெளியிடை படம் வெளிவருவதால் இந்த இரண்டு படங்களும் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.