ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் பைரவா படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரத்தில் சண்டை காட்சியை படமாக்கி விட்டு திரும்பி விட வேண்டும் என்று திட்டமிட்டு சென்றபோதும், அதிரடியான சண்டை காட்சி என்பதால் நாட்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதாம். படத்தின் க்ளைமாக்ஸ் பைட் என்பதால் விஜய்யும் அதிக ஆர்வத்துடன் அந்த காட்சியில் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
மேலும், பைரவா படம் திருநெல்வேலியில் நடக்கும் கதையில் உருவானபோதும், இதுவரை அவர்கள் திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடத்தவில்லை. அதனால் இறுதிகட்ட படப்பிடிப்பை அங்குதான் நடத்த முடிவு செய்திருந்தார் பரதன். ஆனால், பொள்ளாச்சியில் பொது இடத்தில் படப்பிடிப்பு நடந்தபோது பொது மக்கள் அதிகமாக கூடியதால் படப்பிடிப்பு கேன்சலான நிலையில், இந்த முறை அதுபோன்று நடக்கக்கூடாது என்பதற்காக நெல்லை ஊர்களைப்போன்று ஒரு செட்டை சென்னையில் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்துமாறு கூறி விட்டாராம் விஜய். அதனால், தற்போது அந்த செட் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது.