மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
டைரக்டர் ஏ.எல்.விஜய்- அமலாபால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், டைரக்டர் பிரியதர்ஷன்- லிஸி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு செய்தி மற்றும் பிச்சைக்காரன் நாயகி சாத்னா டைட்டஸ்- ஆர்.கே.பிலிம்ஸ் கார்த்தி ரகசிய திருமண செய்தி என சில செய்திகள் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாபி சிம்ஹா-ரேஸ்மி ஆகியோரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக நேற்றைய தினம் ஒரு செய்தி இணையதளங்களில் வெளியாகியிருந்தது. இதையடுத்து பலரும் பாபி சிம்ஹாவை தொடர்பு கொண்டு விசாரித்தபோது ரொம்பவே டென்சனாகி விட்டார்.
அதோடு, எங்களுக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை. தேவையில்லாமல் யாரோ இப்படி தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அப்படி கேள்விப்படும் செய்திகளை எங்களை தொடர்பு கொண்டபிறகு வெளியிடலாம். ஆனால் அதற்குள்ளாக நான் நீயென்று போட்டி போட்டு செய்தியை வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனசு புண்படும் என்று யாருமே யோசிப்பதில்லை என்று பீல் பண்ணுகிறார் பாபி சிம்ஹா.