மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்த வரும் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் இவர் நடித்த எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல் ப்ரீத் சிங். அதோடு, சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகி விட்டதால் அவருக்கான வாய்ப்புகளெல்லாம் ராகுல் ப்ரீத் சிங்கிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், தெலுங்கில் வெகுவிரைவில் நம்பர்-ஒன் நாற்காலியில் உட்கார்ந்து விடும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங். இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அவரை கதையோடு கலந்த ஒரு முக்கியமான கேரக்டரில் பயன்படுத்தப்போகிறாராம் மிஷ்கின். அந்த வகையில், துப்பறிவாளனாக நடிக்கும் விஷாலுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம். அதனால் இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பில் இருந்தே அவரும் கலந்து கொண்டு நடிக்கிறாராம்.