ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மஞ்சிமா மோகன் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஒரே படத்தில் டாப்புக்கு வந்தார். அங்கு வெற்றி பெற்ற கையோடு தமிழுக்கும் வந்து விட்டார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஹீரோயின் ஆனார். ஒரு வழியாக அந்த படத்தை முடித்து விட்டு அடுத்து படத்திற்கு வந்து விட்டார்.
தற்போது அவர் விக்ரம் பிரபு ஜோடியாக முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனாலும் நேற்று படத்திற்கு பூஜை போட்டுவிட்டார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 9வது படம் இது. அரிமா நம்பி படத்தை இயக்கிய கவுரவ் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், டிமாண்டி காலனிக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டைட்டில், மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.