ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி தன் தந்தையின் தொழிலை சிறப்பாக தொடர்ந்து வருகிறார். கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பது, சின்ன பட்ஜெட் படங்களை குறைந்தவிலைக்கு வாங்கி வெளியிடுவது ராமநாராயணனின் பாணி. அவரது மகன் முரளியோ பெரிய பட்ஜெட் படங்களை சர்வசாதாரணமாக வாங்கி வெளியிடுகிறார். தற்போது இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் முரளியின் மனைவி, ஸ்ரீ தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நாடகங்களை நடத்தி வருகிறார். பிரபல இந்திப்பட நட்சத்திரங்கள் அனுபம்கெர் - நீனாகுப்தா நடிக்க சென்னையில் மியூசிக் அகாடமி அரங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தி நாடகம் ஒன்று நடைபெற உள்ளது.
'மேரா வோ மத்லப் நகிதா' என்ற இந்த இந்தி நாடகத்தை ஸ்ரீ தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் ஹேமா ருக்மணி தயாரிக்கிறார். இந்த நாடகத்தைப் பார்க்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அழைப்பிதழை பெற்றுக்கொண்ட கமல்ஹாசன், ஸ்ரீ தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் ஹேமா ருக்மணிக்கும், நடிகர்கள் அனுபம்கெர் - நீனாகுப்தாவிற்கும் வாழ்த்து தெரிவித்தாராம்.