மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் சைப் அலிகானின் சகோதரி சோகா அலிகான். இவர் நடித்து நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ‛31 அக்டோபர்' படம் அடுத்தமாதம் ரிலீஸாக இருக்கிறது. சிவாஜி லோதன் பாட்டில் இயக்கியுள்ள இப்படத்தில் சோகா அலிகான் முதன்முறையாக உடன் வீர் தாஸ் நடித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும், அதன்பின்னர் நடந்த கலவரத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது 31 அக்டோபர் படம். படத்தில் சோகா அலிகான், மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் படத்தில் நீங்கள் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளீர்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா...? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சோகா அலிகான்... ‛‛கண்டிப்பாக மாட்டேன். என்னால் மூன்று குழந்தைகள் எல்லாம் பெற முடியாது. ஏனென்றால் மூன்று குழந்தைகளையும் பக்குவமாய் பார்த்து கொள்வது சிரமமான ஒன்று. நான் உட்பட என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் தான், அவர்களால் பக்குவமாய் பார்க்க முடிந்தது. ஆனால் என்னால் அது முடியாத காரியம்'' என்று கூறியுள்ளார்.
‛31 அக்டோபர்' படம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.