ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் பணியாற்றினர். அப்போது, நடிகர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு சரிவர கணக்கு காட்டாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது, பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் நடிகர் சங்க கூட்டம் நடந்தது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் உள்ளிட்ட மூவரையும், சங்கஉறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக, நடிகர் சங்க நிர்வாகம் நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அதில் நடிகர் சங்கத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன். என் மீதான குற்றத்தை நிரூபிக்காமல் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என கோர்ட்டில் நிரூப்பிப்பேன். செப்., 30ல், சங்கத்தின் பொதுக்குழு கூட்ட வேண்டும். அதில், நான் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே, என்னை, சஸ்பெண்ட் செய்துள்ளனர். இருந்தாலும் நான் என் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்பேன். என் விருப்பமும், நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பது தான்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.