ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட்பிரபு விளையாட்டாக இயக்கிய ஒரு விளையாட்டு படம்தான் சென்னை-28. அந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், வைபவ், விஜய லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். மீண்டும் அதே டீமை வைத்து சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி தயாரித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவாவும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜெய் தவிர அனைவரும் கலந்து கொண்டனர்.
“ஜெய் இன்னும் வளரவேயில்லை. அதற்குள் தன்னை அஜீத் என்று நினைத்துக் கொள்கிறார். இது தவறு. இந்த நிகழ்ச்சிக்கு அவர் எல்லாருக்கும் முன்பு வந்திருக்க வேண்டும்” என்று சிவா பேசினார்.
அப்போது வெங்கட்பிரபு கூறுகையில், முதல் பாகத்தை சென்னையில் நடப்பது போல் படமாக்கினேன். ஆனால் இந்த படத்தை வெளியூர்களுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வது போல் படமாக்கியிருக்கிறேன். அந்த வகையில், 20-20 மேட்ச் போன்று விறுவிறுப்பாக இருக்கும். முதல் பாகத்தில் நடித்துள்ள அனைவருமே இந்த படத்தில் நடித்திருப்பதோடு, விட்டுக்கொடுத்தும் நடித்துள்ளனர். யாருக்கும் எந்தவித ஈகோவும் கிடையாது. குறிப்பாக சம்பளத்தை முக்கியமாக கருதாமல் படம் நன்றாக வர வேண்டும் என்று உண்மையாக உழைத்தார்கள். அவர்களது ஒத்துழைப்பு இருந்ததினால்தான் படத்தை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடிந்தது. கிரிக்கெட் விளையாட்டு சீன்களை எடுக்கும்போது 500 பேருக்கு மேல் கூடியிருந்தனர். ஆனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் படமாக்கினோம். இதை ஆண்டவன் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் ஜெய்யை பற்றி குறிப்பிடும் போது... எனக்கு இங்கே ஜெய் தேவையே இல்லை. நான் ஜெய்யை வைத்து ஷோலோவாக படமெடுத்திருந்தால் ஓகே. ஆனால் ஒரு பெரிய டீமை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். இந்த மேடைக்கு ஜெய் அவசியமில்லை என்றாலும் ஜெய்க்கு இந்த மேடை அவசியம் என்றார்.