ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், ஷங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன். ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாப்பிள்ளை படத்தில் நடித்தார். கடைசியாக ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்தார். இந்தி மற்றும் நேபாள மொழியில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மனீஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். இரண்டு ஆண்டு வாழ்க்கைக்கு பிறகு 2012ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். இதற்கிடையில் மனீஷாவை புற்று நோய் தாக்கியது. இதில் தன் ஆழகையும், தலைமுடியையும் இழந்த மனீஷா கடுமையான போராட்டத்துக்கு பிறகு புற்றுநோய் பிடியிலிருந்து மீண்டு. மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
மனீஷாவின் பெற்றோரும் உறவினர்களும் நேபாளத்தில் வசிக்கிறார்கள். மனீஷா மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசிக்கிறார். இந்தி படங்களில் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு தனிமையில் வசிப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்... "எனது தனிமையை போக்க அடுத்த ஆண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன். மேலும் 2வது திருமணத்திற்கும் தயாராகிவிட்டேன். என் மீது அன்பு செலுத்தும் ஒரு கணவரை தேடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் மனீஷா கொய்ராலா.