ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை தீபாவளி அன்று படங்களை வெளியிடுவதற்கு கடும் போட்டிகள் எப்போதுமே இருப்பது வழக்கம். அன்றைய தினத்தில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் ரசிகர்களிடமும் ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால்தான் மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளி அன்று படங்களை வெளியிட பலரும் முயற்சி செய்வார்கள்.
இந்த வருட தீபாவளியன்று “எஸ் 3, காஷ்மோரா, கத்திச் சண்டை, கொடி, கடவுள் இருக்கான் குமாரு” ஆகிய படங்கள் வெளிவருவதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் போட்டியில் இருந்து தற்போது 'எஸ் 3' விலகியுள்ளதாகத் தெரிகிறது. ஒரே சமயத்தில் அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் போட்டி போடுவதால் தேவையற்ற வேண்டாத விஷயங்கள் வளரக் காரணமாகிவிடும் என நினைக்கிறார்களாம். ஒருவர் படம் நன்றாக இருந்து மற்றவர் படம் சுமாராக இருந்தால் கூட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதையாவது பரப்பிவிடுவார்கள் என பயப்படுகிறார்களாம். சமூக வலைத்தளங்களில் சிக்கி சின்னா பின்னமான முதல் படம் 'அஞ்சான்' என்பதை யார் மறந்தாலும் சூர்யாவும், லிங்குசாமியும் மறக்க மாட்டார்கள் இல்லையா?.
எனவே, கார்த்தி நடிக்கும் 'காஷ்மோரா' படத்தை மட்டும் வெளியிட்டு சூர்யா நடித்துள்ள 'எஸ் 3' படத்தை டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் என குடும்ப சகிதமாய் உட்கார்ந்து முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. சூர்யாவுக்கு இதற்கு முன் வெளியான “24, மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான்” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காததால் 'எஸ் 3' படத்தை திட்டமிட்டு வெளியிட்டு வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்களாம்.