ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைட்ஸ், விநியோகஸ்தர் கார்த்தியை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ள சூழ்நிலையில், என் மகளை கார்த்தியிடமிருந்து மீட்டு, என்னிடம் தாருங்கள் என்று சாட்னாவின் அம்மா மாயா கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. பிச்சைக்காரன் படத்தை தமிழ்நாடு முழுவதும் கேஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை, சாட்னா திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தான் கோடம்பாக்கத்தில் காலை முதலே ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
சாட்னாவின் சுய விருப்பத்தோடும் பெற்றோரின் சம்மதத்துடனும் தான், அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சாட்னாவை மணந்த கார்த்தி கூறியிருக்கிறார். ஆனால் சாட்னாவின் அம்மாவோ அப்படியொரு திருமணமே நடக்கவில்லை, என் மகளை என்னிடம் தாருங்கள் என்று கதறுகிறார்.
இதுப்பற்றி சாட்னாவின் அம்மா மாயா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ.... ‛‛என் பெயர் மாயா, கணவர் பெயர் டைட்ஸ். கேரளாவில் சொந்தமாக ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறோம். மகள் சாட்னா நடிகையாகவும், மகன் பிளஸ் 2-வும் படித்து வருகிறான். சாட்னா நடிக்க ஆரம்பித்த பின்னர் அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், என் கணவரும் தான் செல்வோம். சமீபத்திய காலமாக நாங்கள் அவளுடன் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசை வார்த்தை : கேஆர் பிலிம்ஸ் கார்த்தி, என் மகளிடத்தில் நடிகை எல்லாம் வேண்டாம், உன்னை பெரிய தயாரிப்பாளராக மாற்றுகிறேன், விநியோகஸ்தராக மாற்றுகிறேன், நாம் லண்டனில் போய் செட்டிலாகிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் எல்லாம் கூறி, மூளை சலவை செய்து எங்களிடமிருந்து மகளை பிரித்து விட்டார்.
கோபத்தில் கார்த்தியை அடித்தேன் : இனி நடிக்க கூடாது, திருமணத்திற்கு பிறகு நடித்தால் சரியாக இருக்காது என்று கூறி சில படங்களுக்காக வாங்கி வைத்திருந்த அட்வான்சையும் திருப்பி கொடுக்க வைத்து விட்டார். இதனால் கோபத்தில் நான், கார்த்தியை இரண்டு முறை அடித்து கூட இருக்கிறேன். எங்கள் மகளின் விஷயத்தில் தேவையில்லாமல் உள்ளே நுழைந்து, அவளை ஒருதலையாக காதலித்து, எங்களிடமிருந்து பிரித்தே விட்டார். போனில் கூட பேச முடியாத அளவிற்கு செய்துவிட்டார் கார்த்தி.
மகளை மீட்டு தாருங்கள் : பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கும் போது மிகுந்த மன வேதனையாக உள்ளது. இந்த கார்த்தி விபரம் இல்லாத ஒருவர். என் மகள் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியொரு செயலை செய்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. என் மகளை எங்களுடன் பேசக்கூட செய்வதில்லை. விரைவில் நாங்கள் நடிகர் சங்கம் மூலம் பேசி ஒரு தீர்வு காண இருக்க உள்ளோம். பதிவு திருமணம் செய்திருப்பது எல்லாம் சுத்தமான பொய், என் மகள் எங்களுக்கு வேண்டும், கார்த்தியிடமிருந்து என் மகளை மீட்டு தாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.