ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
‛பக்ளி' எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. இந்தப்படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இரண்டாண்டு இடைவெளிக்கு பின்னர், தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' எனும் படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி வேடத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டாண்டுகளாக பாலிவுட்டில் உங்களை ஆளேயே காணோமே, ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த கியாரா... ‛‛பக்ளி படத்திற்கு பிறகு இரண்டாண்டுகள் நான் எந்த படத்திலும் நடிக்காதது உண்மை தான். இதற்கு முக்கிய காரணம், நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்தது தான் வேறு ஒன்றுமில்லை. நான் காந்திருந்ததற்கும் பலன் கிடைத்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த தோனி படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி'' என்று கூறியுள்ளார்.