ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பேபி படத்தை தொடர்ந்து தற்போது ‛பிங்க்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் செப்., 16ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், பேபி படத்தின் இரண்டாம் பாகத்தில் டாப்சி நடிக்க இருப்பது அனைவரும் அறிந்தது தான். அதேசமயம் படத்திற்கு மீரா என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இதை டாப்சி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... ‛‛பேபி படத்தின் அடுத்த பாகமாக உருவாக இருக்கும் படத்தின் தலைப்பு மீரா கிடையாது, ‛நாம் ஷபானா'. இதில் நான் ஷபானா எனும் ரோலில் நடிக்கிறேன். இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. அக்ஷ்ய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். செப்., 18 முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம். நீரஜ் பாண்டே படத்தை இயக்கவில்லை, சிவம் நாயர் இயக்குகிறார்'' என்று டாப்சி கூறியுள்ளார்.