ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலேயே முன்னணி ஹீரோயினான ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தவர். அடுத்து நயன்தாரா, எமி ஜாக்சன், மீண்டும் ஹன்சிகா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் உதயநிதி. நடித்தால் முன்னணி ஹீரோயின்கள் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். ஆனால், அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது வளரும் ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
எழில் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். கௌரவ் இயக்க உள்ள படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களைத் தவிர அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்க 'ஒரு நாள் கூத்து' படத்தின் அறிமுக நாயகி நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தான் நடிக்கும் மூன்று படங்களிலும் தொடர்ந்து வளரும் நாயகிகளை உதயநிதி ஒப்பந்தம் செய்யச் சொன்னதின் பின்னணியில் ஏதோ விவகாரம் இருப்பதாகவே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.