ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகத்தில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் திரைப்படங்கள் வெளியாகும். வெள்ளிக்கிழமைத் தவிர வேறு நாட்களில் ஏதாவது விசேஷம் இருந்தால் மட்டுமே மற்ற நாட்களிலும் படங்கள் வெளிவரும். இந்த வார வெள்ளிக் கிழமை அஷ்டமியாக இருப்பதால் நாளையே “இருமுகன், வாய்மை” ஆகிய படங்கள் வெளிவருகின்றன.
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' படம் இயக்குனர் ஆனந்த் சங்கருக்கு இரண்டாவது படம். அவர் இயக்குனராக அறிமுகமான 'அரிமா நம்பி' சுமாராக ஓடிய படம். இரண்டாவது படத்திலேயே விக்ரமை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதனால் அதற்கேற்றபடி வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் படத்தில் வைத்துள்ளார். நயன்தாரா, நித்யா மேனன் இருவருமே நடிப்பில் அசத்துபவர்கள். இருந்தாலும் நயன்தாரா இந்தப் படத்தில் கூடுதல் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார். விக்ரமே படத்தின் வில்லனாக நடித்திருப்பதால் அந்த வில்லன் கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்தே படத்தின் வெற்றியும் அமையும்.
'வாய்மை' படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். பாக்யராஜின் மகனாக இருந்தாலும் அவர் நடித்த எந்த ஒரு படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. இந்தப் படமாவது அவருக்குத் திருப்புமுனையைத் தருமா என்பதுதான் கேள்வி. படத்தில் கே.பாக்யராஜ், தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, பானு, பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி, மனோஜ் பாரதிராஜா, பிருத்வி பாண்டியராஜன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்கைந்து வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் படம். அரசியல் சார்ந்த என்பதால் நன்றாக எடுத்திருந்தால் வெற்றி பெற வாய்ப்புண்டு.