ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். தற்போது ரன்பீர், கைவசம் இரண்டு படங்கள் வைத்துள்ளார் . ஒன்று சஞ்சய் தத்தின் சுயசரிதை படம், மற்றொன்று டிராகன் என்ற சூப்பர் ஹீரோ படம். இந்த இருப்படங்களில் எந்தப்படத்தில் ரன்பீர் முதலில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது.
தற்போது ரன்பீர், ஐஸ்வர்யா ராய் அனுஷ்கா சர்மா நடிப்பில் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ தில் ஹே முஷ்கில் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கத்ரீனாவுடன் நடித்து வரும் ஜாக்கா ஜசூஸ் படத்தில் நடிக்கிறார் ரன்பீர். இதை முடித்த கையோடு சஞ்சய் தத்தின் சுயசரிதை படத்தில் நடிக்கிறார். இதனால் இயக்குநர் அயன் முகர்ஜியின் டிராகன் படம் சஞ்சய் தத் படத்திற்கு பின் நடிப்பார் என்று கூறப்படுகிறது. டிராகன் படம் சூப்பர் ஹீரோ படமாக உருவாக இருக்கிறது.
ரன்பீர் நடித்துள்ள ஏ தில் ஹே முஷ்கில் படம் இந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கிறது.