ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதிர்நீச்சல், அரிமா நம்பி படங்களில் நடித்தபோது பேசப்பட்ட பிரியா ஆனந்த் அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்காமல் மார்க்கெட்டில் பின்தங்கிவிட்டார். அதனால், தமிழில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக தெலுங்கு, மலையாள படங்களில் கமிட்டாகி வந்தவர் தற்போது கெளதம் கார்த்தியுடன் வை ராஜா வை படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது முத்துராமலிங்கம் என்ற படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
கதைப்படி இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள பிரியாஆனந்த், ரொம்ப துணிச்சல்கார பெண்ணாக நடித்திருக்கிறாராம். அதேசமயம், கெளதம்கார்த்தியை காதலிக்கிற காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி கிராமத்து பெண்களைப்போன்று வெட்கம், கூச்சம் எல்லாவற்றையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி புதுமையான ரொமான்ஸ் கொடுத்திருக்கிறாராம் பிரியாஆனந்த். இதற்காக அவருக்கு பிரத்யேக பயிற்சி கொடுக்கப்பட்டதாம். ஆனால், பிரியாஆனந்த் வெட்கப்பட்டதைப் பார்த்து அசந்து போன கெளதம் கார்த்திக், பின்னர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும், அவரை வெட்கப்படச்சொல்லி கலாய்த்துக் கொண்டேயிருந்தாராம்.