ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'பர்மா', 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை இயக்கியவர் தரணிதரன். பர்மா படம் படு தோல்வியடைந்தது. ஆனாலும் தரணிதரன் சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகி ஜாக்சன் துரை படத்தைத் தயாரித்தார் ஸ்ரீ க்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன். ஜாக்சன் துரை படத்தை தொடங்கிய பிறகும் அவரை பலரும் பயமுற்றினார்கள். அதை எல்லாம் மீறி தைரியமாக அந்தப்படத்தை தயாரித்தார் சரவணன். அவரே எதிர்பார்க்காதவகையில் ஜாக்சன் துரை படம் பெரும் லாபம் கொடுத்தது.
இந்நிலையில் அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார் தரணிதரன். 'மெட்ரோ' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், அதில் முக்கிய வேடத்தில் நடித்த ஷிரிஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படத்தில் மழைக்கு முக்கிய பங்கு இருக்கிறதாம்! இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பை அடைமழை காலமான அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளார் தரணிதரன்.
''ஒரு கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை ஒரு மழை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.'' என்கிறார் தரணிதரன்! மெட்ரோ படத்தில் கிடைக்காத கவன ஈர்ப்பு ஷிரிஷுக்கு இந்த படத்திலாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்.