ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லன் நடிகராக இருந்த கரண் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு கொக்கி படத்தின் மூலம் ஹீரோவாக ரீ -என்ட்ரி ஆனார். பிரபுசாலமன் இயக்கிய அந்தப்படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றி பெற்றது. ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார் கரண். அதன் பிறகு அவர் நடித்த படங்களில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் சுமாராக போனது. தீ நகர், மலையன், காத்தவராயன், இரண்டு முகம், கந்தா, சூரன் என அவர் நடித்த அனைத்து படங்களுமே தோல்வி அடைந்தது. கடைசியாக அவர் நடித்த கன்னியும் காளையும் செம காதல் படம் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்தார் கரண். தனது மனைவி ரேவதியை தயாரிப்பாளராக்கி கே எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் முதல் படமாகத்தான் உச்சத்துல சிவா படத்தை தயாரிக்கிறார்.இதனை ஜேப்பி இயக்குகிறார், இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் நடித்த நேகா ஹீரோயின். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின், ஞானசம்பந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார்.
இது இரவு 9 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 5 மணிக்குள் முடிகிற கதை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு இரவு வாழ்நாளில் மறக்க முடியாத இரவாக இருக்கும். அப்படி ஹீரோ கரணின் ஒரு மறக்க முடியாத இரவுதான் படம். சாதாரணமான ஒருவன் ஒரே இரவில் நாடே போற்றும் ஹீரோவாகிறான். அது எப்படி என்பதுதான் திரைக்கதை. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கரண் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள ஒரு வெற்றி கட்டாயம் தேவை என்ற கட்டத்தில் இருக்கிறார். அதற்கு உச்சத்துல இருக்கும் சிவா கை கொடுப்பாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.