ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து ஆகிய படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார். இவர் தற்போது உள்குத்து, சர்வர் சுந்தரம், புருஸ்லீ போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்கும் செல்வகுமாருக்கு அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம். அதற்காகத்தான் அவர் சினிமாவிற்குள் வந்தாராம்.
அதுகுறித்து அவர் கூறுகையில், நான் அஜித்தின் தீவிரமான ரசிகன். அதனால் அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தேன். அப்படி வந்து பல படங்களை தயாரித்து வருகிறேன். இதையடுத்து அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. அப்படி அவரது கால்சீட் கிடைக்கும்பட்சத்தில் அந்த படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படமாக தயாரிப்பேன் என்கிறார் செல்வகுமார்.