ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"சினிமா மக்களுக்கான அரசியலை பேச வேண்டும்" என்ற கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய எழுத்தாளர் கீரா தற்போது இயக்கி உள்ள படம் மெர்லின். விஷ்ணுபிரியன், அஸ்வின், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப்போடும். பராசக்தியில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும் காக்கா முட்டை, ஜோக்கர் மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.
இன்றைய தேவை களப்பணிகள். சினிமாவும் ஒரு களப்பணிதான். கலை என்பது சிறந்த அரசியல் ஆயுதம். எந்த மக்களுக்காக கலை பேசுகிறதோ. அந்த மக்களிடமிருந்தே கலை பிறக்க வேண்டும். இதற்காக படைப்பாளிகள் மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும். எல்லா படங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் இருக்க வேண்டும். அது மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும். என் படங்கள் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். என்றார்.
விழாவில் இயக்குனர்கள் தங்கர்பச்சான், தாமிரா, வசந்த பாலன், மீரா கதிரவன், நடிகர் ஆரி, சிங்கம்புலி, விஷ்ணுப்ரியன். நடிகை அஸ்வினி, லொள்ளுசபா ஜீவா, டாக்டர் இளையராஜா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்