ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிமாண்டி காலனி என்ற பேய் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இமைக்கா நொடிகள் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இது ஒரு டெரர் கொலைகாரனுக்கும், ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்குமான சேசிங்க கதை என்கிறார்கள். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார், நயன்தரா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: அதர்வா ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. அவர் பவர்புல்லான தனி கேரக்டரில் நடிக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியா நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை என்பதால் எதையும் விரியாக சொல்ல இயலாது. என்கிறார் அஜய் ஞானமுத்து.