ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்த பிறகு உச்சத்திற்கு சென்று விட்ட தன்ஷிகா இப்போது மிகவும் பிசியாகிவிட்டார். சமுத்திரகனியின் கிட்ணா படத்தில் நடித்திருக்க வேண்டிய தன்ஷிகா, காபலிக்காக தலைமுடியை கிராப் வெட்டிக் கொண்டதால் அந்தப் படம் தள்ளிப்போய்கொண்டிருக்கிறது. தன்ஷிகாவுக்கு தலைமுடி வளர சமுத்திரகனி ஒருபக்கம் காத்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் சமுத்திரகனியின் உதவியாளர் எஸ்.பாணிக்கு தன்ஷிகாவின் கிராப் சிகை அலங்காரம் பிடித்து விட்டதால் அதை வைத்து ராணி என்ற படத்தை ஒரே ஷெட்யூலில் எடுத்து முடித்து விட்டார்.
முழுக்க முழுக்க மலேசியாவில் நடக்கும் இந்த கதையில் தன்ஷிகா ரிவால்வார் ரீட்டா ரேன்ஞ்சுக்கு ஆக்ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறாராம். எம்.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ளது. எ.குமரன், எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இளையராஜா இசை அமைக்கிறார்.
"இது கம்ப்ளீட் ஆக்ஷன் கதை. தன்ஷிகாதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். விஜயசாந்திக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோயின் இடத்தை பிடித்திருக்கிறார் தன்ஷிகா. அவர் முறைப்படி சண்டை பயிற்சி எடுத்திருப்பதுடன், சிலம்ப கலைலையும் முறையாக கற்றிருக்கிறார். அவரது திறமையை இதில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறோம். மலேசியாவில் உள்ள கேமரூன் தீவில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரும்பி விட்டோம். தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது" என்கிறார் இயக்குனர் எஸ்.பாணி.