ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் பலரையும் மயக்கிய பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. மலர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் வந்த போதே ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள். அடுத்து ஸ்ருதிஹாசன் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, முதன் முதலில் ஒரு புகைப்படம் வெளியானது. அப்போதே பிரேமம் படத்தின் அதி தீவிர ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். மீம்ஸ்களை அள்ளித் தெளித்து அவரை அலற வைத்தார்கள்.
தற்போது மீண்டும் அப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பிரேமம் தெலுங்கு படத்தின் எவரே.. பாடல் வெளியானது. அவ்வளவுதான் ஸ்ருதிஹாசனின் நடிப்பையும், மேனரிசங்களையும் பொறுத்துக் கொள்ள முடியாத பிரேமம் படத்தின் அதி தீவிர ரசிகர்கள் மீண்டும் ஸ்ருதிஹாசனைப் பற்றி மீம்ஸ்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். படக்குழுவினரே பயந்து போய் யு டியூப்ல் கமெண்ட்டுகளை பிளாக் செய்யும் அளவிற்கு நிலைமை போனது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பிரேமம் தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தான் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் கவனத்துடன் படமாக்குவேன் எனக் கேட்டுக் கொண்டதால்தான் நடிக்க சம்மதித்தேன். நாகசைதன்யா எனது நண்பர், அதனாலும் படத்தில் நடித்தேன். பிரேமம் தெலுங்குப் படத்தை புதிதாகப் பார்ப்பது போல் பார்த்து ரசியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் அப்படிக் கேட்டுக் கொண்டாலும் ரசிகர்கள் சும்மா இல்லாமல், மேலும் மேலும் மீம்ஸ்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.