ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் அலி அப்பாஸ் ஜாபரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் சல்மான் கான் நடிப்பில் வெற்றி படமாக அமைந்த சுல்தான் படத்தை இயக்கினார். இப்படம் அலி அப்பாஸூக்கும் நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வசூலையும் வாரி குவித்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன் அலி அப்பாஸ் , ‛ஏக் தா டைகர் -2' படத்தை சல்மானை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இப்படத்திற்கு "டைகர் ஜிந்தா ஹே"என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் நடிகை கத்ரீனா கைப்பிடம், ஏக் தா டைகர் -2 பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கத்ரீனா "ஏக் தா டைகர் -2 படத்தை பற்றிய ஆதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வரவில்லை. எனக்கு இப்படம் பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் கிடைக்காததால் இப்படம் இயக்குவது இன்னும் முடிவு செய்யவில்லை. "டைகர் ஜிந்தா ஹே" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் நானே கூறுகிறேன் " என்று கூறினார்.
கத்ரீனா கைப், தற்போது "பார் பார் தேகோ " படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.