ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏராளமான குறும்படங்களை இயக்கியவர் எழில். இவர், தற்போது செஞ்சிட்டாளே என் காதல என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மதுமிளா, ரமா, அபிநயா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர மைம்கோபி, அர்ஜுன், அஜய்ரத்னம் நடிக்கிறார்கள். மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ராஜ்பரத் இசை அமைக்கிறார். படத்தின் தலைப்பும், கதையும் பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாக பரவலாக விமர்சனம் உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் எழில் கூறியதாவது: திரும்ப, திரும்ப காதலில் தோற்கும் ஒருவன். ஏன் தோற்கிறோம் என்று காரணம் தேடி அலையும்போது அவனுக்கு ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுமே கதை. காதலில் தோற்பதற்கான காரணம் அவனிடத்தில்தான் இருக்கிறதே தவிர பெண்களிடத்தில் இல்லை. வித்தியாசமாக கவனம் பெறட்டும் என்றுதான் செஞ்சிட்டாளே என் காதல என்று தலைப்பு வைத்திருக்கிறோம். மற்றபடி ஒரு காட்சியிலோ, ஒரு வசனத்திலோ கூட பெண்களை இழிவுபடுத்தவில்லை. என்கிறார் எழில்.