ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொங்கி எழு மனோகரா படத்தில் நடித்தவர் அருந்ததி நாயர். அதன்பிறகு விருமாண்டியும் சிவனாண்டியும், சைத்தான் படங்களில் நடித்திருப்பவர், அடுத்த படியாக விதார்த் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, சில டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். மேலும், நான் நயன்தாராவின் ரசிகை என்று சொல்லிக்கொள்ளும் அருந்ததி நாயர், பர்பாமென்ஸ்ரீதியாக அவரை பின்பற்றினாலும் கிளாமரில் அவரை பின்பற்ற மாட்டேன். அந்த விசயத்தில் அசின் மாதிரி அளவோடுதான் நடிப்பேன் என்கிறார்.
மேலும், அனுஷ்கா நடித்தது போன்ற அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது சினிமா கனவாகியிருக்கிறது. குறிப்பாக அருந்ததி, ருத்ரம்மா தேவி போன்ற படங்களில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து அதிர்ந்து விட்டேன். அந்த அளவுக்கு அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார் அவர். கிட்டத்தட்ட ஆக்சன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தை சுமந்திருந்தார். அதனால் என்னை நடிப்பில் மிரட்டிய முதல் நடிகை அனுஷ்காதான். நானும் 5.8 உயரம் இருப்பதால் என்னை பார்ப்பவர்களும் ஆக்சன் கதைகளுக்கு பொருத்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால், எதிர்காலத்தில் ஆக்சன் கதைகளில் நடித்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் உள்ளது என்கிறார் அருந்ததி நாயர்.