கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமான சங்கமித்ராவை சுந்தர்.சி இயக்கயிருப்பது தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அந்த படத்தை சரித்திர பின்னணி கொண்ட கதையில் இயக்குகிறார் சுந்தர்.சி., பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட படமாக உருவாகயிருக்கும் இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சி முதலில் நடந்தது. ஆனால் அவர் மறுத்து விடவே, பின்னர் சூர்யாவிடம் கால்சீட் கேட்டனர். அவரும் பிடிகொடுக்கவில்லை. அதனால் இப்போது ஜெயம்ரவியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த நிலையில், சரித்திர கதைக்கு பொருத்தமான நடிகைகளை பட்டியலிட்டபோது அனுஷ்காதான் முதலிடம் பிடித்தாராம். ருத்ரம்மா தேவி, பாகுபலி என நடித்து விட்டு தற்போது பாகுபலி-2வில் மெகா வேடத்தில் நடித்து வரும் அனுஷ்கா, சங்கமித்ராவில் நடித்தால் தமிழ், தெலுங்கு இரண்டு பதிப்பிற்கும் அவரையே நடிக்க வைத்து விடலாம் என்று யோசித்துள்ளார்களாம். தற்போது அவர் நடித்து வரும் பாகுபலி-2 படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருப்பதோடு, சங்கமித்ரா இந்த ஆண்டு இறுதியில் தொடங்கயிருப்பதால் அனுஷ்காவின் கால்சீட் இந்த படத்திற்கு தாராளமாக கிடைத்து விடும் என்கிறார்கள்.