ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் ரம்யா. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் அவர். இந்நிலையில் ரம்யாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபல விமர்சகர் ஒருவருக்கு தகாத கெட்ட வார்த்தைகள் கொண்ட டுவிட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அந்த டுவிட்களை ரம்யா அனுப்பவில்லையாம். யாரோ மர்ம நபர்கள் அவரது டுவிட்டருக்குள் சென்று தகாத வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விமர்சகருக்கு அனுப்பியுள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கொடுத்ததோடு, இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.