ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷோபான நடிகைளில் வித்தியாசமானவர். தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இப்போதும் சினிமாவோடு நடனத்தையும் சேர்த்து காதலித்து வருகிறவர். சென்னையில் நடன பள்ளி நடத்தி வருங்கால சந்ததிகளுக்கும் நாட்டியத்தை போதித்து வருகிறார்.
ஷோபனாவின் நாட்டிய நாடகம் கிருஷ்ணா. ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த நாடகம் கிருஷ்ணனின் லீலைகளை ஆங்கில உரையுடன் நாட்டிய வடிவில் நடத்தப்படுகிறது. சினிமாவைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள். அதாவது ரேவதி முதல் ஷபனா ஆஸ்மி வரை இதற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ரசூல் பூக்குட்டி நாடகத்திற்கு சவுண்ட் டிசைன் செய்திருப்பது கூடுதல் அம்சமாகும்.
சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேறிய இந்த நாட்டிய நாடகம். அதன் பிறகு தமிழ்நாடு, மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய், அபுதாபி, குவைத், மலேசியா, சிங்கப்பூர், கென்யா ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்டது. தற்போது 100 மேடைகளை ஏறி சாதனை படைத்துள்ளது. கடந்த 25ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் 100வது காட்சி நடந்தது. அப்போதும் அரங்கம் நிரம்பி வழிந்தததுதான் ஷோபனாவின் சாதனை.