ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பழம்பெரும் நடிகர் நாகேஷ் தன்னுடைய சம்பாத்தியத்தில் சென்னை, தி.நகரில் கட்டிய திரையரங்கம் தியேட்டர் நாகேஷ். தியேட்டர் நாகேஷ் என்று பெயர் வைக்கப்பட்டாலும் மக்கள் அந்த திரையரங்கத்தை நாகேஷ் தியேட்டர் என்றே அழைத்து வந்தனர். வியாபாரிகள் நிறைந்த இடத்தில் அமைந்ததினாலோ என்னவோ நாகேஷ் தியேட்டர் வெற்றிகரமாக இயங்கவில்லை. எனவே நாகேஷ் திரையரங்கம் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக மாற்றபட்டது.
தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது 'மானே தேனே பேயே', 'கடை எண் 6' ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், அறிமுக இயக்குனர் முகமது இசாக் இயக்கும் 'நாகேஷ் திரையரங்கம்' படத்திலும் நடிக்கவிருக்கிறார்!
சென்னை பாண்டி பஜாரில் இயங்கி வந்த நாகேஷ் தியேட்டர் போலவே பல திரையரங்கங்கள வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் நாகேஷ் திரையரங்கத்தை பின்னணியாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஆரி ரியல் எஸ்டேட் ஏஜென்டாக நடிக்கிறாராம். முன்னாள் கதாநயகி நடிகையான பானுப்ரியா ஆரிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.