மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
திருமணமாகி இரண்டே வருடங்களில் விவாகரத்தை நாடும் நட்சத்திர தம்பதிகளை விட, 25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து அதன்பின் விவாகரத்தை தேடிச்செல்லும் நட்சத்திர தம்பதிகள் தான் இன்னும் கூடுதலாக அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். அந்தவகையில் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் பிரபல நடிகையான லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் கருத்து வேறுபாடு ஏற்படவே இப்போது 25 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.. இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் பெரிதாக தாக்கி பேட்டி எதுவும் கொடுக்காமல் நிதானம் காத்துவந்தது ஆச்சர்யம் தான்.
இப்போது பிரியதர்ஷன், தங்களது பிரிவுக்கு முக்கிய காரணம் 'ஈகோ' தான் என குறிப்பிட்டுள்ளார். “இரண்டு விதமான எண்ணங்களை கொண்டுள்ள ஒரு தம்பதி, ஒரே கட்டிலில் உறங்குவது என்பதைவிட, நாகரிகமாக பிரிந்துவிடுவதே நல்லது என்பதுதான் என் கருத்து” என்கிறார் பிரியதர்ஷன். குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாழ்க்கையில் பல வருடங்கள் நடிக்க வேண்டி இருந்தது.. கடவுள் எனக்கு எல்லாவித வளங்களையும் கொடுத்ததை நான் எப்படி ஏற்றுக்கொண்டேனோ அதேபோலத்தான் இந்தபிரிவையும் ஏற்றுக்கொண்டேன்” என இந்த விவாகரத்தை பாசிடிவாக எடுத்துக்கொண்டுள்ளாராம் பிரியதர்ஷன்.