ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான அரங்கில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படமாக்கப்படவில்லை. மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளே படமாக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் செப்டம்பர் மாதம் முதல் தான் படமாக்கப்பட உள்ளது. அந்தக் காட்சிகள் பூந்தமல்லி அருகில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படமாக்கப்பட உள்ளன. அதில் தான் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் என்கிறார்கள். அதுதான் ரஜினி சம்பந்தப்பட்ட கடைசி கட்டப் படப்பிடிப்பாம். சுமார் ஒரு மாத காலம் நடைபெற உள்ள அந்த ஷெட்யூலுடன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடுமாம். அதற்கடுத்து இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைய சுமார் ஆறு மாத காலம் ஆகும் என்கிறார்கள்.
அவையனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தால் 2017ம் ஆண்டு மே மாதம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிடுவார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.