ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள கிடைத்தன.
சொல்லப்போனால் அந்தப்படம் தான் சரத்குமார் அடுத்தடுத்து சில மலையாளப்படங்களில் நடிப்பதற்கான சிறந்த ஆரம்பமாகவும் அமைந்தது.. அப்படிப்பட்ட பழசிராஜா நண்பர்களான மம்முட்டியும் சரத்குமாரும் சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து சில மணி நேரம் உரையாடினார்கள். இந்தச்சந்திப்பின்போது சரத்குமார் மம்முட்டியுடன் தனது மகள் வரலட்சுமி இணைந்து நடித்த 'கசபா' படத்தில் மம்முட்டியின் நடிப்பை பற்றி பாராட்ட, மம்முட்டியோ வரலட்சுமியின் நடிப்பு பற்றி சரத்குமாரிடம் சிலாகித்து பாராட்டினாராம்.