ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மனிதன் படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை எழில் இயக்குகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிக்கு பிறகு எழில் இயக்கும் படம் இது. எழிலின் ஆஸ்தான நடிகர்கள் சூரி, ரவிமரியா இதிலும் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்போதெல்லாம் படத்தை எடுத்து அதை போட்டுக்காட்டினால் மட்டுமே படத்தை வாங்குவார்கள். ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களை மட்டுமே பார்க்காமல் வாங்குவார்கள். என்றாலும் பூஜைபோடும்போதே படம் விற்பது என்பது மிகவும் அபூர்வம். அந்த அபூர்வம் உதயநிதியின் படத்திற்கு நடந்துள்ளது. எழில் படம் என்றால் காமெடி இருக்கும், வசூலுக்கு மினிமம் கியாரண்டி இருக்கும் என்பதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பூஜையின்போது கோவை பகுதியில் படத்தை திரையிட கோவை கந்தசாமி கலை கூடம் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜமன்னார் வாங்கினார். மற்ற ஏரியாக்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. படத்தை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அனேகமாக ஸ்ரீதிவ்யா அல்லது கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.