விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடித்த ரிக்ஷாக்காரன் படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது அதே தியேட்டரில் ரிக்ஷாக்காரன் படத்தின் பாடல்களின் மறு வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன். நடிகர்கள் சின்னி ஜெயந்த், மயில்சாமி, வின்செண்ட் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் மயில்சாமி பேசியதாவது: குற்றம் இல்லாத மனிதன், கடவுள் இல்லாத கோவில் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்னுடைய சிறு வயதில் இருந்தே நான் புரட்சி தலைவரின் படங்களையும், அவரின் பாடல்களையும் மட்டுமே பார்த்து வளர்ந்தேன். ஆங்கிலம் என்பது அறிவை வளர்த்து கொள்வதற்காக மட்டுமே தவிர ஆடம்பரத்திற்காக இல்லை... என்ற நம் தலைவரின் ரிக்ஷாக்காரன் பட வசனத்தை இன்றளவும் என்னால் மறக்க முடியாது. தன்னுடைய ரசிகர்களின் டிக்கெட் விலை ஏறிவிடக் கூடாது என்று தன் சம்பளத்தை உயர்த்தாத ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் மட்டும் தான்.
படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது: நாற்பது வருடங்களுக்கு முன்பே நாற்பது அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை அமைத்த பெருமை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்திற்கு தான் உண்டு. 1971 ஆம் ஆண்டில் ரிக்ஷாக்காரன் திரைப்படம் வெளியான அதே திரையரங்கில் இன்று இந்த விழாவானது நடைபெருகிறது. எனக்கு வயது தற்போது 90 என்றாலும், இந்த நாள் மூலம் எனக்கு 40 வயது குறைந்து இருக்கிறது. என்னை இங்கு அழைத்து என்னை அன்போடு வரவேற்ற ஒவ்வொரு எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
விழாவிற்கான ஏற்பாடுகளை குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் சார்பில் பி.கே.மணி, டி.கே.கிருஷ்ணகுமார், மற்றும பிலிம் விஷன் நிறுவனத்தின் சார்பில் கே.ராமு ஆகியோர் செய்திருந்தனர்.