ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த கரீனா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இனி இவர் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதிலும் கோல்மால் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கரீனா, 4-ம் பாகமான கோல்மால் அகைன் படத்தில் நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தது.
இதுப்பற்றி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கரீனாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛எனக்கான வேடங்கள் இருந்தால் என்னிடம் வந்து கேளுங்கள். நான் கர்ப்பமாக இருக்கிறேன், இல்லை, உங்களுக்கு என்ன?, கர்ப்பமாக இருந்தால் என்ன தவறு, நடிக்க கூடாதா? எதற்காக பயப்படுகிறார்கள், நடிக்கபோகும் நான் தான் பயப்பட வேண்டும். நான் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் பயணிக்கிறேன். அதேசமயம் நான் என்னுடைய சினிமாவை தொழிலை மிகவும் நேசிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.