ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பரதேசி படத்தில் நடித்து பேசப்பட்டவர் தன்ஷிகா. அதையடுத்து ரஜினியின் கபாலியில் நடித்த பிறகு இன்னும் பேசப்படும் நடிகையாகி விட்டார். கபாலிக்கு பிறகு காத்தாடி, காலக்கூத்து ஆகிய படங்களில் நடித்து விட்டவர், அடுத்த படியாக சமுத்திரகனி இயக்கும் கிட்ணா படத்தில் முக்கிய நாயகி வேடத்தில் நடிக்கிறார். ஆனால் கபாலி படத்திற்கு முன்பே சமுத்திரகனி இயக்கயிருந்த அந்த படம் கபாலிக்கு பிறகு தொடங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அதுபற்றிய தகவல் இல்லை.
அதனால் அந்த படம் குறித்து தன்ஷிகாவிடம் கேட்டபோது, கபாலி படத்திற்காக நான் தலை முடியை கத்தரித்து நடித்தேன். ரஜினி சாரின் படம் என்பதால் அந்த படத்தில் எனது கேரக்டர் கச்சிதமாக பொருந்த வேண்டும். முக்கியமாக திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதற்காக தலைமுடியை தியாகம் செய்து நடித்தேன். ரஜினி சாரின் படத்தில் ஒரு மிகப்பெரிய வேடம் கிடைத்த தோடு நல்ல பெயரும் கிடைத்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி.
மேலும், அப்படி நான் தலைமுடியை கத்தரித்ததால்தான் கிட்ணா படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை. அதனால் இப்போது வேகவேகமாக முடியை வளர்த்து வருகிறேன். எனது தலைமுடி போதுமான அளவு வளர்ந்ததும் கிட்ணா படத்தை தொடங்கி விடுவார் சமுத்திரகனி என்று கூறும் தன்ஷிகா,
இதற்கிடையே இன்னும் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப் பது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அந்த படங்களில் கமிட்டாகி விடுவேன் என்கிறார்.