ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் தீபாவளி திருநாள் பட வெளியீட்டிற்கு மிக முக்கியமான நாள். அன்று வருடம் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி மவுசு உண்டு. மற்ற விசேஷ நாட்களில் வெளியாகும் படங்களை விட தீபாவளி தினத்தன்று வெளியாகும் படங்கள் மீது ரசிகர்களுக்கும் தனி கவனம் இருக்கும்.
இந்த வருடத் தீபாவளிக்கு கார்த்தியின் 'காஷ்மோரா', விஷாலின் 'கத்திச் சண்டை', தனுஷின் 'கொடி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. கடந்த சில நாட்களாக சூர்யாவின் 'எஸ் 3' படமும் அன்றைய தேதியில் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது.
சமீபகாலங்களில் பெரிய படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியாகின்றன. அப்படிப் பார்த்தால் வரும் தீபாவளிக்கு எந்தப் படமும் 500 தியேட்டர்களில் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் ரிலீஸ் தியேட்டர்களாக மொத்தம் 900 தியேட்டர்களே உள்ளன.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் பெரிய படங்கள் என்பதால் அவர்கள் குறைவான தியேட்டர்களில் படங்களை வெளியிட வாய்ப்புகள் குறைவு. மேலும், சூர்யா, கார்த்தி படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தியேட்டர்காரர்களிடம் நெருக்கமாக உள்ளவை. அப்படிப் பார்த்தால் அவர்களிரண்டு படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், அதை விஷால், தனுஷ் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இந்த விவகாரம் இன்னும் சில நாட்களில் சூடுபிடிக்கவும் வாய்ப்புள்ளது. அனேகமாக இரண்டு படங்களைத் தவிர மற்ற படங்கள் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை என்ற நிலைமைதான் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.