ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு வருடம் நியூயார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் 'கிரான்ட் பரேட்' என்ற நிகழ்வை நடத்தி வருகிறார்கள். அதில் இந்த வருடம் கலந்து கொள்வதற்காக பாபா ராம்தேவ், அபிஷேக் பச்சன், விக்ரம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர் விக்ரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது பலரும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், அவருடன் பேசவும் முயற்சித்துள்ளனர். ஆனால், விக்ரம் அவர்களை விரட்டியடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தன்னை நெருங்க விடாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், பேசக் கூடவும் விக்ரம் விரும்பவில்லையாம். இதனால், அமெரிக்க வாழ் இந்தியவர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க தமிழ் சங்கத் தலைவரான பிரகாஷ் எம் சுவாமி அவரது முகநூலில் கூறியுள்ளதாவது,
“உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் கூட நீங்கள் ஏற்கவில்லை.
உங்களுடன் வந்த அபிஷேக் பச்சன் அனைவருடனும் நட்பாகப் பழகி, ரசிகர்களுடன் கைலுக்கிய போது, நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டீர்கள்.
உண்மையில் நாங்கள் பிரபுதேவாவைத்தான் அழைக்கலாம் என இருந்தோம். ஆனால், அவருடைய வேலைப்பளு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதற்கு முன் இந்த இந்திய நாள் பரேட் நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் மிகவும் எளிமையாகப் பழகினார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கம் அவர்கள் தயங்கவேயில்லை.
விக்ரமை வெறும் 30, 40 பேர் சூழ்ந்ததற்கே அவர் இப்படி நடந்து கொண்டார், ஆனால், சரத்குமாரை ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது, இருந்தாலும் அவருடைய பணிவான அன்பை நியூயார்க் மக்கள் மறக்க மாட்டார்கள். விக்ரம், நீங்கள் சரத்குமாரை விட தகுதியிலும், சீனியாரிட்டியிலும் பெரியவரா ?.
அது மட்டுமல்ல, அழைப்பிதழில் 'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்' என கண்டிப்பாகப் போடச் சொன்னீர்கள். வெளிநாட்டு நிகழ்வுகளில் விக்ரமை அழைக்க அவர் தகுதியானவர் அல்ல. அவருக்கு புகழில் தான் ஒரு ரஜினிகாந்த், ஷாரூக்கான் என நினைப்பு.
ஏர் இந்தியாவின் முதல் வகுப்பில் உங்களை அழைத்து வந்தது, சுற்றிப் பார்க்க அல்ல, அவ்வளவு செலவு செய்தது அவமானத்தை அனுபவிக்க அல்ல. உங்கள் மீது வெட்கப்படுகிறோம், நமது நாட்டுக்கு அவமானம், திரையுலகத்திற்கு அவமானம், நீங்கள் திமிர் பிடித்த ஒரு நடிகர், திமிர் பிடித்த அணுகுமுறை கொண்டவர்,” என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
'இருமுகன்' படத்தின் நாயகன் விக்ரமின் இன்னொரு முகத்தைப் பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், இந்தியர்களும் விக்ரமின் செய்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.