ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தில்வாலே படத்தின் தோல்விக்கு பிறகு ரோஹித் ஷெட்டிக்கும், ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்தது. மற்றொரு புறம், இந்த மோதல் காரணமாக 3வதாக இருவரின் கூட்டணியில் உருவாக இருந்த படம் கிடப்பில் போடப்படதாகவும், இருவரும் பிரிந்து தங்களின் வேலைகளில் இறங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ரோஹித் ஷெட்டியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதலில் ஷாருக்கானும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ண இருப்பதாக கூறப்பட்டது. பிறகு நான் அறிக்காத அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் நானும் ஷாருக்கானும் சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருக்கிறார். நான் லண்டனில் இருக்கிறேன். அப்படி இருக்கையில் நாங்கள் எவ்வாறு சண்டையிட்டு கொள்ள முடியும் என்றார். ரோஹித் ஷெட்டி தற்போது "கோல்மால் அகைன்" என்ற தலைப்பில் கோல்மால் படத்தின் 4வது பாகத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2017ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.