14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நயன்தாரா வெங்கடேஷ் நடித்த பாபு பங்காரம் தெலுங்கிலும், செல்வி என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளிவந்தது. இதில் தெலுங்கு பாபு பங்காரம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 4 நாள் வசூலிலேயே படத்தின் பட்ஜெட்டான 25 கோடி வசூலாகிவிட்டது. இனி வசூலாகும் பணம் அத்தனையும் லாபம்தான். ஆனால் செல்வி தமிழ்நாட்டில் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. பெரிய படத்துக்கான விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி இருந்தும் படம் ஓடவில்லை.
நயன்தாரா நடித்த திருநாள் படம் வெற்றிப் படம் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தாலும் வசூல் ரீதியாக திருநாள் பின்தங்கியே இருந்தது. வெளியான முதல் வாரத்தில் ஓரளவு வசூல் இருந்தது. அதன் பிறகு இல்லை. ஆனால் திருநாளை தோல்வி படமாகவும் கருதுவதற்கு இல்லை. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் வெவ்வேறு படங்கள் மூலம் நயன்தரா தன் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஓப்பனிங் கலெக்ஷன் தரக்கூடிய ஹீரோயினாக நயன்தாரா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.