ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டில் பரபரப்பான சம்பவங்கள் ஏதுவும் நடந்துவிட்டால், உடனே அதை சினிமாவாக எடுத்துவிடுவார்கள். அந்தவகையில் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அன்ன ஹசாரேயின் போராட்டத்தை சினிமாவாக எடுக்க இருக்கிறார்கள். ஊழலை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தியும் தொடர்ந்து 12நாளாக உண்ணாவிரதம் இருந்து, கடைசியில் அதில் வெற்றி பெற்று இந்திய வரலாற்றில் இடம்பெற்று விட்டார் காந்தியவாதி அன்னா ஹசாரே. இந்நிலையில் ஹசாரேயின் போராட்டத்தை பிரபல டைரக்டர்கள் சுமித்ரா பாவே மற்றும் சுனில் சுதாங்கர் ஆகியோர் மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு "அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்" (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது தான். லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது. ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக் காட்டும் என்று கூறினர்.