ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி நந்திதாவின் மார்க்கெட் அடங்கி விட்டது போன்று தோன்றினாலும் இப்போது அவர் உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும், அட்டகத்திக்கு பிறகு உள்குத்து படத்தில் மீண்டும் தினேசுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நந்திதா, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இதுவரை நடிக்காத சற்று நெகடீவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படு கிறது.
ஆனால் அதுகுறித்து நந்திதாவைக் கேட்டால், செல்வராகவன் படத்தில் வித்தியாசமான ரோலில்தான் நடிக்கிறேன். ஆனால் அது எந்தமாதிரியான வேடம் என்பதை இப்போதே சொல்லிவிடமுடியாது. அதோடு சிலர், டபுள் ஹீரோயினி கதைகளில் நடிக்கிறீர்களே. உங்களை டம்மி பண்ணி விடமாட்டார்களா? என்றும் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால் நான் இதற்கு முன்பு டபுள் ஹீரோயினி கதைகளில் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னொரு ஹீரோயினும் அந்த படங்களில் இருந்தது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எனக்கான கேரக்டர் வலுவானதாக இருக்கும் பட்சத்தில் நான் யாரை நினைத்தும் பயந்ததில்லை. அப்படித்தான் இந்த நெஞ் சம் மறப்பதில்லை படத்திலும் ரெஜினா இருந்தும் நான் கவலைப்படவில்லை. டபுள் ஹீரோயினி கதை என்றாலே நமக்கு ஹிட்டுதான் என்கிற பாசிட்டீவ் மனநிலையில்தான் நடித்து வருகிறேன் என்கிறார் நந்திதா.